செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி

Published On 2021-06-04 14:45 GMT   |   Update On 2021-06-04 14:45 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. நேற்று முன்தினம் வரை இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு 271 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல், காரைக்குறிச்சி, கட்டனாச்சம்பட்டி, நம்பர்.3-குமாரபாளையம், பரமத்திவேலூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News