செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா

Published On 2021-06-02 13:57 GMT   |   Update On 2021-06-02 13:57 GMT
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 130 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 3080 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 351பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 328 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3056 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 130 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News