செய்திகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு- டிஎன்பிஎஸ்சி

Published On 2021-05-30 03:05 GMT   |   Update On 2021-05-30 03:05 GMT
கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-2 பணிக்கான நேர்முகத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது.

அதேபோல், ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில் அடங்கிய, உதவி மின் ஆய்வாளர், உதவி என்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற இருந்த துறை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. அதன்படி இந்த தேர்வானது ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News