செய்திகள்
போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் உதிரிபாகம் திருடிய 2 பேர் கைது
தா.பேட்டை அருகே போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் உதிரிபாகம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை:
தா.பேட்டை அருகே பேரூர் பகுதியை சேர்ந்தவர் காராளன். இவரது மகன் சுந்தரவேல் (வயது 25). இவருக்கு சொந்தமான டிராக்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. தற்போது பொது முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருடைய டிராக்டருக்கு தேவையான உதிரி பாகம் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன் (24) என்பவருடன் சேர்ந்துகொண்டு அய்யாற்று பகுதியில் மணல் திருடி பறிமுதல் செய்யப்பட்டு ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரிலிருந்து உதிரிபாகத்தினை திருடிக்கொண்டு முசிறி - துறையூர் மெயின் சாலையில் ஜெம்புநாதபுரம் பிரிவுரோடு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணிமுடித்துவிட்டு அந்த வழியாக சென்ற போலீசார் நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.
இதனால் இருவரையும் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த டிராக்டரில் உதிரிபாகங்களை கழற்றி திருடிசென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
தா.பேட்டை அருகே பேரூர் பகுதியை சேர்ந்தவர் காராளன். இவரது மகன் சுந்தரவேல் (வயது 25). இவருக்கு சொந்தமான டிராக்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. தற்போது பொது முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருடைய டிராக்டருக்கு தேவையான உதிரி பாகம் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன் (24) என்பவருடன் சேர்ந்துகொண்டு அய்யாற்று பகுதியில் மணல் திருடி பறிமுதல் செய்யப்பட்டு ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரிலிருந்து உதிரிபாகத்தினை திருடிக்கொண்டு முசிறி - துறையூர் மெயின் சாலையில் ஜெம்புநாதபுரம் பிரிவுரோடு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணிமுடித்துவிட்டு அந்த வழியாக சென்ற போலீசார் நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.
இதனால் இருவரையும் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த டிராக்டரில் உதிரிபாகங்களை கழற்றி திருடிசென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.