செய்திகள்
பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:
பரமக்குடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சூசை மாணிக்கம் (வயது 83). இவர் பரமக்குடியில் இருந்து தனது மகன் பிலிக்ஸ் பாக்கியத்துடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சக்கொல்லை சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த சூசை மாணிக்கம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். பிலிக்ஸ் பாக்கியம் காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.