செய்திகள்
கொரோனா அச்சத்தால் முதியவர் தற்கொலை
தாராபுரம் அருகே கொரோனா அச்சத்தால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சின்ன காளியம்மன்கோயில் அருகே உள்ள நாராயண பிள்ளை தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 75). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.கொரோனா நோய் தொற்று காரணமாக நாள்தோறும் பலர் இறப்பதை பார்த்து சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனியாக இருந்த வீரப்பன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.