செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த பாம்பு

பழனியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

Published On 2021-05-18 14:16 GMT   |   Update On 2021-05-18 14:17 GMT
பழனியில் 5 அடி நீளமுள்ள பாம்பு வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:

பழனி ராமநாதன்நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். தொழிலாளி. நேற்று இரவு இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குணசேகரன் வீட்டிற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வீட்டுக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.
Tags:    

Similar News