செய்திகள்
மேல்மலையனூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
மேல்மலையனூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 58) விவசாயி. இவர் நுங்கு வெட்டுவதற்காக தனது நிலத்தில் உள்ள பனைமரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.