செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 750 பேருக்கு கொரோனா

Published On 2021-05-14 13:45 GMT   |   Update On 2021-05-14 13:45 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும்‌ 2,478 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 1,054 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 750 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதிலும்‌ 2,478 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 1,054 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News