செய்திகள்
அரூர் அருகே வாகனம் மோதி இளநிலை பொறியாளர் பலி
அரூர் அருகே வாகனம் மோதியதில் இளநிலை பொறியாளர் பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
அரூர்:
அரூர் அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவரது மனைவி மலர்கொடி (27). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் தனது மோட்டார்சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் ஓசூரில் இருந்து பையர் நாயக்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை சாலையில் இடதுபுறம் ஓரமாக சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மலர்கொடியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கோட்டப்பட்டி போலீசார் பலியான சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அரூர் அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவரது மனைவி மலர்கொடி (27). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் தனது மோட்டார்சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் ஓசூரில் இருந்து பையர் நாயக்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை சாலையில் இடதுபுறம் ஓரமாக சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மலர்கொடியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கோட்டப்பட்டி போலீசார் பலியான சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.