செய்திகள்
தருமபுரி அருகே இலங்கை தமிழர் முகாமில் 6 பேருக்கு கொரோனா
பெரியாம்பட்டி அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற் குட்பட்ட பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், ஏ.சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரங்களில் மட்டும் இந்த பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் அடிலம் ஊராட்சி ஏ.சப்பானிப்பட்டியில், 15 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று பெரியாம்பட்டி அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், காய்ச்சல் பரிசோதனை உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற் குட்பட்ட பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், ஏ.சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரங்களில் மட்டும் இந்த பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் அடிலம் ஊராட்சி ஏ.சப்பானிப்பட்டியில், 15 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று பெரியாம்பட்டி அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், காய்ச்சல் பரிசோதனை உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.