செய்திகள்
ஜிகே வாசன்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு குழு- ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2021-05-06 05:41 GMT   |   Update On 2021-05-06 05:41 GMT
கொரோனாவினால் இறந்தவர்கள் உடல்களை ஒப்படைக்க சில விதிமுறைகள் இருந்தாலும், சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உடனடியாக உடல்களை ஒப்படைக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பையும், தேவையையும் அறிந்து அவற்றை முன்னேற்பாடாக, தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு ஓர் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு தொடர் கண்காணிப்பில் இருந்து, தேவை அறிந்து மருத்துவமனைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதற்குண்டான பணியை அரசும், சுகாதாரத்துறையும் விரைந்து செய்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.



கொரோனாவினால் இறந்தவர்கள் உடல்களை ஒப்படைக்க சில விதிமுறைகள் இருந்தாலும், சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உடனடியாக உடல்களை ஒப்படைக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News