செய்திகள்
விஷம்

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-30 09:25 GMT   |   Update On 2021-04-30 09:25 GMT
கோவை பீளமேடு அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள எல்லை தோட்டத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் முத்துவேல் (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் ராமநாதபுரத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். 

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் முத்துவேல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து யாருடனும் பேசாமல் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் குளியல் அறையில் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News