செய்திகள்
திருட்டு

பாபநாசம் அருகே 7 பம்புசெட்டுகளில் ஓயர் திருட்டு

Published On 2021-04-28 10:37 GMT   |   Update On 2021-04-28 10:37 GMT
பாபநாசம் அருகே 7 பம்புசெட்டுகளில் ஓயர் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, பெருமாக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன், ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி வெங்கடேசன். இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது பெருமாக்கநல்லூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய பம்பு செட்டுகள் உள்ளன. இந்த பம்பு செட்டுகளில் மின் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்று விட்டதாகவும் அதுபோல எங்கள் கிராமத்தில் உள்ள மேலும் பலரது மின்மோட்டார்களில் பொருத்தப்பட்டிருந்த வயர்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது இதுபோல் 7 பம்புசெட்டுகளில் ஓயர் திருட்டு நடந்துள்ளது. மேலும் தற்போது எங்கள் கிராமத்தில் வெளியாட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதோடு பல குற்ற செயல்கள் நடந்தவண்ணம் உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ஒயர்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News