செய்திகள்
தற்கொலை

தேனியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-04-27 14:17 GMT   |   Update On 2021-04-27 14:17 GMT
தேனியில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:

தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் 2-வது தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி முருகேஸ்வரி (வயது 47). இவர் பசு மாடுகள் வளர்த்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். 

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வெளியே சென்று இருந்த அவருடைய மகன் விக்னேஸ்வரன் (21) அங்கு வந்தார். அவர் உடனடியாக கயிற்றில் இருந்து முருகேஸ்வரியை இறக்கி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News