செய்திகள்
நகை கொள்ளை

சிங்காநல்லூரில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

Published On 2021-04-26 10:38 GMT   |   Update On 2021-04-26 10:38 GMT
சிங்காநல்லூரில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சிங்காநல்லூர் போத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 23-ந் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளி பாளையம். இந்த பகுதியில் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.

இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது கடையின் முன்பக்க ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் கடையின் ‌ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Tags:    

Similar News