செய்திகள்
வீரபாண்டி பகுதியில் இன்று மின் நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர்:
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மின் நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், எஸ்.ஆர்.நகர், குள்ளேகவுண்டன்புதூர், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, குளத்துப்புதூர், ராஜகணபதி நகர், பெரியாண்டிபாளையம்,இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியாகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தொணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், செந்தில் நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.