செய்திகள்
பணகுடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பணகுடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த சொர்ணகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மனைவி ராயல் (வயது65). இவர் சில மாதங்களாக உடல்நிலை பாதிப்படைந்து காணப்பட்டாராம்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.