செய்திகள்
தற்கொலை

உத்தமபாளையம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-04-18 14:14 GMT   |   Update On 2021-04-18 14:14 GMT
உத்தமபாளையம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்ததேவன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (39). இவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூங்கொடி கோபித்துக்கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் செல்வி என்பவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சுந்ததேவன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News