செய்திகள்
கோப்புபடம்

பாவூர்சத்திரத்தில் இன்று அதிகாலை வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-04-17 06:43 GMT   |   Update On 2021-04-17 06:43 GMT
பாவூர்சத்திரத்தில் இன்று அதிகாலை வாலிபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

பாவூர்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூர்- குறும்ப லாப்பேரி சாலையில் கருப்பசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று அதிகாலை பயங்கர வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் ஆகியோரும் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மேலப்பாவூரை சேர்ந்த முகேஷ் என்ற ராக்கி (வயது27) என்பது தெரிய வந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News