செய்திகள்
முககவசம்

தென்காசியில் முககவசம் அணியாத 576 பேருக்கு அபராதம்

Published On 2021-04-16 09:58 GMT   |   Update On 2021-04-16 09:58 GMT
தென்காசியில் முககவசம் அணியாத 576 பேருக்கு ரூ.1,31,400 அபராதமாக விதிக்கப்பட்டது.

தென்காசி:

தென்காசியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்காசியில் முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 37 பேருக்கு ரூ.7,700-ம், காவல்துறை சார்பில் 483 பேருக்கு ரூ. 96,600-ம், வருவாய்த்துறை சார்பில் 28 பேருக்கு ரூ. 5,600-ம், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 28 பேருக்கு ரூ.21,500-ம் என மொத்தம் 576 பேருக்கு ரூ.1,31,400 அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News