செய்திகள்
கோப்புபடம்

வானூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-04-10 14:13 GMT   |   Update On 2021-04-10 14:13 GMT
வானூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று ஆகாசம்பட்டு கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த விழுப்புரம் அருகே உள்ள அச்சரம்பட்டை சேர்ந்த சுதாகர் (வயது 34), புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32), ஆலங்குப்பம் சரண்ராஜ் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News