செய்திகள்
விபத்து பலி

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-10 09:21 GMT   |   Update On 2021-04-10 09:21 GMT
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த எர்ரசீகலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 75). கூலித்தொழிலாளி.

இவர் நேற்று காலை காவேரிப்பட்டணத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையில் எர்ரசீகலஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்கோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் (25) என்பவர் காவேரிப்பட்டணத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக அண்ணாமலை மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அண்ணாமலையை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News