செய்திகள்
கைது

நெல்லையில் மது விற்ற 31 பேர் கைது

Published On 2021-04-01 09:30 GMT   |   Update On 2021-04-01 09:30 GMT
நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:

சட்டமன்ற தேர்தலை யொட்டி சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News