செய்திகள்
கோப்பு படம்

சின்னாளபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் பலி

Published On 2021-03-29 16:31 GMT   |   Update On 2021-03-29 16:31 GMT
சின்னாளபட்டி அருகே தரைமட்ட கிணற்றில் கால்களை கழுவ சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து பலியானார்.
சின்னாளபட்டி:

சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). என்ஜினீயரான இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலையொட்டி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சக்திவேல் அம்பாத்துரையில் உள்ள வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று அதிகாலை இவர் அப்பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றில் கால்களை கழுவ சென்றார். அப்போது அவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சக்திவேலின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News