செய்திகள்
கோப்பு படம்.

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-03-25 15:23 GMT   |   Update On 2021-03-25 15:23 GMT
திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,284 ஆக உயர்ந்தது. 133 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

அதேநேரம் நேற்று 12 பேர் பூரண குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை 14,967 பேர் பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உள்ளது.
Tags:    

Similar News