செய்திகள்
கொள்ளை

மதுரையில் சலூன் கடை பூட்டை உடைத்து ரூ.3.50 லட்சம் கொள்ளை

Published On 2021-03-24 07:11 GMT   |   Update On 2021-03-24 07:11 GMT
மதுரையில் சலூன் கடை பூட்டை உடைத்து ரூ.3.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை புது எல்லீஸ் நகரை சேர்ந்தவர் முரளி தரன் (வயது 31). இவர் மேல வெளிவீதி வணிக வளாகத்தின் முதல் மாடியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

முரளிதரன் கடையை பூட்டிவிட்டு சென்றார்.மர்ம நபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.3.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

முரளிதரன் அடுத்த நாள் காலையில் சலூனை திறக்க வந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3.50 லட்சம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக முரளிதரன் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் ரூ.3.50 லட்சம் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News