செய்திகள்
விபத்து

வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2021-03-20 14:40 GMT   |   Update On 2021-03-20 14:40 GMT
நன்னிலம் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
நன்னிலம்:

நாகை மாவட்டம் வடகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் மணிகண்டன்(வயது33). சம்பவத்தன்று இவர் வடகரையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சன்னாநல்லூருக்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார்.

அப்போது திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் திருப்பனையூர் ஆர்ச் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வாய்க்கால் மதகில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கோவிந்தராஜ் நன்னிலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News