செய்திகள்
மநீம வேட்பாளர் சந்தோஷ்பாபுவிற்கு கொரோனா தொற்று
சென்னை வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்பாபு நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி என ட்வீட் செய்துள்ளார்.