செய்திகள்
போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

செஞ்சியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-03-08 18:19 GMT   |   Update On 2021-03-08 18:19 GMT
கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
செஞ்சி:

செஞ்சி உட்கோட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி தலைமையில் டாக்டர் ஆல்வின் ராயலு, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஏழுமலை, ஜெயக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தடுப்பூசி போட்டனர்.
Tags:    

Similar News