செய்திகள்
கோப்பு படம்.

மதுரையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா

Published On 2021-03-05 23:41 GMT   |   Update On 2021-03-05 23:41 GMT
மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 767 ஆக அதிகரித்து உள்ளது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில் மதுரையில் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த வர்களின்எண்ணிக்கை 20 ஆயிரத்து 767 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர 57 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
Tags:    

Similar News