செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

மோகனூர், வாழவந்தி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-03-05 12:56 GMT   |   Update On 2021-03-05 12:56 GMT
மோகனூர், வாழவந்தி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே வாழவந்தி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தாம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, ஊஞ்சப்பாளையம், கோட்டணம்பாளையம், பெரியகரசபாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டபாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, ‌நெய்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News