செய்திகள்
தற்கொலை

வலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று பெண் தற்கொலை

Published On 2021-03-04 11:43 GMT   |   Update On 2021-03-04 11:43 GMT
வலங்கைமான் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:

வலங்கைமானை அடுத்த கொட்டையூர் சர்வம் மானியம் மேலத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்யா (வயது30). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்து எலிமருந்தை தின்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சத்யா பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News