செய்திகள்
தீ விபத்து

உக்கடத்தில் இன்று காலை பிரியாணி ஓட்டலில் தீ விபத்து

Published On 2021-03-04 10:28 GMT   |   Update On 2021-03-04 10:28 GMT
கோவை உக்கடத்தில் பிரியாணி ஓட்டலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை:

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சபைர். இவர் உக்கடம் போலீஸ் நிலையம் அருகே பிரியாணி ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று கடையில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டனர். இரவில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை சைபர் ஓட்டலை திறப்பதற்காக கடைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து ஊழியர்களுடன் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சமையல் அறையில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளி வந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அங்கிருந்த ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்து வெளியில் ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அந்த பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சபைர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டலில் இருந்த சிலிண்டர்களை அகற்றினர். பின்னர் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News