செய்திகள்
தற்கொலை

குலசேகரன்பட்டினத்தில் முதியவர் தற்கொலை

Published On 2021-03-01 17:19 GMT   |   Update On 2021-03-01 17:19 GMT
குலசேகரன்பட்டினத்தில் தன்னை சரியாக கவனிக்க யாருமில்லை என்ற கவலையில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 75). இவருக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். இசக்கிமுத்துவை அவரது 2-வது மகன் முருகன் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் முருகன் சென்னைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்று விட்டார். 

இதனையடுத்து அவரது மூத்த மகன் கண்ணன் கவனித்து வந்துள்ளார். ஏற்கனவே கண்பார்வை இழந்த இசக்கிமுத்து தன்னை சரியாக கவனிக்க யாருமில்லை என மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News