செய்திகள்
வெயில்

8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-03-01 09:45 GMT   |   Update On 2021-03-01 09:45 GMT
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 24 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். காற்றின் வேகம் குறைந்து வருவதாலும் கிழக்கில் இருந்து தரைக்காற்று வீசுவதாலும் வெப்பம் உயர்ந்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் காற்று லேசாக வீசக்கூடும் என்பதால் அங்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். உள் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும்.

வடக்கு, வடமேற்கு திசையில் இருந்து காற்று வந்தால் வெப்பநிலை உயரும்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பனிப்பொழிவு காணப்படும். சென்னையில் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News