செய்திகள்
தற்கொலை

திருப்பத்தூர் அருகே பெண் தற்கொலை

Published On 2021-02-26 05:10 GMT   |   Update On 2021-02-26 05:10 GMT
திருப்பத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் நூர்முகமது, ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சஸ்லின் என்கின்ற கலாவதி (வயது 28).

கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கலாவதி பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News