செய்திகள்
தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை

Published On 2021-02-26 04:17 GMT   |   Update On 2021-02-26 04:17 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் ரபேல்புரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 39). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, போக்குவரத்துக்கழகத்தில் நேர காப்பாளராக வினோத் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வினோத்துக்கு திருமணமாகி மோனோலிசா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News