செய்திகள்
திருட்டு

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-02-26 04:07 GMT   |   Update On 2021-02-26 04:07 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள குழி மாத்தூர் குடியானதெருவை சேர்ந்தவர் சதீ‌‌ஷ் கண்ணன் (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி மாதா ஆலயம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை திருமண மண்டபம் முன்பு நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் சதீ‌‌ஷ் கண்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News