செய்திகள்
ராமநாதபுரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
ராமநாதபுரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே முதுனாள் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன் (வயது 80). இவர் கோட்டைமேடு தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சேதுபாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.