செய்திகள்
கைது

கோட்டாரில் மசாஜ் சென்டரில் விபசாரம்- 4 பேர் கைது

Published On 2021-02-24 09:19 GMT   |   Update On 2021-02-24 09:19 GMT
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விபசாரம் நடப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டை சோதனை செய்தபோது அரை குறை ஆடையுடன் 2 பெண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டனர்.

வாலிபர்கள் 4 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட பெண்கள் கும்பகோணம், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பிடிபட்ட வாலிபர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், காஜாநவாஸ், பிரான்சிஸ் டென்ஸ், மெஜாஸ் என்பது தெரியவந்தது.

இவர்களை போலீசார் கைது செய்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த பெண் புரோக்கர் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் ரூ.30 ஆயிரம் டெபாசிட் பணம் கட்டி மாதம் ரூ.2,500 வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். இந்த வீட்டிற்கு வாலிபர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தனர். வாலிபர்களிடம் ஆயிரம் முதல் ரூ.1,500 வரை பெண்களிடம் உல்லாசமாக இருக்க பணம் வாங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாலிபர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து சென்றுள்ள தகவல் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட பெண்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள பெண் புரோக்கரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News