செய்திகள்
தற்கொலை

தஞ்சையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-17 12:40 GMT   |   Update On 2021-02-17 12:40 GMT
தஞ்சையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மானம்புச்சாவடி ஐயன் பெருமாள் கொத்தன் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). இவர் தஞ்சையில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவரது வீடு பூட்டிக் கிடந்ததால் உறவினர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வராததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கயிற்றில் தூக்குபோட்டு பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News