செய்திகள்
திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசம்- வாலிபர் கைது
விழுப்புரம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி விழுப்புரம் மாவட்டம் பில்லூரை சேர்ந்த குமார் மகன் விஜயசுந்தரம் (வயது 27) என்பவர் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஜயசுந்தரத்தை கைது செய்தனர்.