செய்திகள்
நன்னிலம் அருகே கொத்தனார் தீக்குளித்து தற்கொலை
நன்னிலம் அருகே மது அருந்த பணம் இல்லாததால் தீக்குளித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம்:
நண்ணிலம் அருகே உள்ள தூத்துக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது65). கொத்தனார். இவர் சரிவர வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மது பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் விரக்தி அடைந்த வீராச்சாமி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அரசு நன்னிலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.