search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடி பழக்கம்"

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார்.
    • தாக்குதலில் காயம் அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில், மது போதை யில், மனைவி மற்றும் குடும்பத்தாரை தாக்கிய கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்தவர் தீபா ரோஸ்லின் (வயது25). இவருக்கும், கீழ்மாத்தூர் சங்கர் (28) என்பவருக்கும், கடந்த சில ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்ததும், சங்கர் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன், சங்கர் மாமியார் வீட்டு க்கு வந்து தங்கி விட்டார். ஆனால், வேலை எதற்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 17-ந் தேதி வீட்டு சமையலுக்காக ஏதாவது வாங்கி வருமாறு சங்கரிடம் தீபா ரோஸ்லின் சொல்லியுள்ளார். அதன்படி வெளியே சென்ற சங்கர் மாலை 6 மணிக்குதான் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏன் தாமதம் என மனைவி தீபா ரோஸ்லின் கேட்டபோது, நீ என்ன என்னை கேள்வி கேட்பது என சண்டை போட்டதோடு, மனைவியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த மனைவியின் சகோதரி தீபிகாவையும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தீபா ரோஸ்லின் தந்தை, பாட்டி ஆகியோரையும் சங்கர்தாக்கினார். தாக்கு தலில் காயம்அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் கொடு த்த புகாரின் பேரில், திரு.பட்டினம்போலீசார் வழக்கு பதிவுசெய்து சங்கரை தேடிவருகின்றனர்.

    ×