செய்திகள்
அச்சன்புதூர் அருகே மணல் திருடிய வாலிபர் கைது
அச்சன்புதூர் அருகே சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் ரோந்து சென்றார். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பரமு என்பவரின் மகன் மருதையா பாண்டி (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 5 மூட்டை மணல் பறிமுதல் செய்யப்பட்டது.