செய்திகள்
மரணம்

கள்ளிக்குடி அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

Published On 2021-02-14 06:46 GMT   |   Update On 2021-02-14 06:46 GMT
கள்ளிக்குடி அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

கள்ளிக்குடி அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகள் வெள்ளம்மாள் மைக்குடியில் வசித்து வருகிறார். மூதாட்டி ஆதிலட்சுமி சமைத்துக் கொண்டிருந்தபோது இவருடைய சேலையில் தீப்பிடித்தது.

இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் மூதாட்டி அலறினார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த ஆதிலட்சுமி பலனின்றி இறந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News