செய்திகள்
கோப்பு படம்.

தாரமங்கலம் அருகே பள்ளி மாணவி கடத்தல்- மாணவன் மீது புகார்

Published On 2021-02-08 01:08 GMT   |   Update On 2021-02-08 01:08 GMT
தாரமங்கலம் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற மாணவன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.








தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் பிடிக்க சென்றவள் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி அந்த மாணவியின் தாய் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அதே பகுதியை சேர்ந்த 17-வயதுடைய 11-ம் வகுப்பு மாணவன் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News