செய்திகள்
சுரேஷ்

மன்னார்குடி அருகே வாய்க்காலில் வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2021-01-28 07:33 GMT   |   Update On 2021-01-28 07:33 GMT
மன்னார்குடி அருகே வாய்க்காலில் வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த மெய்பழத்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). நேற்றுமுன்தினம் இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள திருமேனி ஏரி வாய்க்காலில் சுரேஷ் பிணமாக கிடந்துள்ளார். இ்தனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News