செய்திகள்
விபத்து பலி

மொபட் மீது லாரி மோதியதில் முதியவர் பலி

Published On 2021-01-25 09:24 GMT   |   Update On 2021-01-25 09:24 GMT
மொபட் மீது லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 62). இவர் நேற்று காலை ஒரு மொபட்டில் பெரம்பலூர் நோக்கி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மலையப்ப நகர் பிரிவு சாலை அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகாலிங்கம் மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தார். அப்போது அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News